November 2004

Monthly Archive

வாய்ப்பாடு…

Posted by mugunth on 24 Nov 2004 | Tagged as: வாழ்க்கை

நேற்று தமிழ்வழிக் கல்வியின் நடைமுறை பயன் பற்றிய ஒரு கருத்து என் சீன ஆசிரியையிடமிருந்து வந்தது! எப்படி என்று கேட்கிறீர்களா. ) மேலும் படிங்க ….

அன்மைகாலமாக நான் சீன மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். வாரத்தில் இரண்டு நாள் வகுப்புகள். வகுப்பு ஆரம்பிக்கும் போது என்னுடன் சேர்ந்து ஐந்து பேர் இருந்தார்கள். எல்லோரும் மலேசிய ரைஸ்குழுவைச் சார்தவர்கள். சீனம் பேசாதவர்களுக்காக ஒரு சீன வகுப்பு வேண்டும் என்று நாங்கள் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அதன் விளைவாக இன்னொரு ரைஸ் உறுப்பினரால் ஒரு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இது 3 மாத்ததிற்கு முன். இப்போது ஒவ்வொருவராக விலகி தற்போது நான் மற்றும் நியூசிலாந்தைச் சார்ந்த ஒரு வெள்ளைக்கார், இரண்டு பேர்தான் வகுப்பில் இருக்கிறோம். வாரத்தில் இரண்டு நாள் வகுப்பு. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் வகுப்புக்கு முடிந்த அளவுக்கு மட்டம் போடாமல் சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால் சீனம் தான் என் தலையில் ஏற ரொம்பக் கஸ்டப்படுகிறது ;)

நேற்றைய வகுப்பில் சீனத்து கணக்கு குறியீடுகளை ( கூட்டல், கழித்தல் போன்றவை) பற்றி வகுப்பு எடுத்தார் எங்கள் ஆசிரியை. அப்போது பெருக்கல் வாய்ப்பாடு பற்றி குறிப்பிடும்போது, வேகமாக சொல்லக்கூடிய முறையில் உள்ளது சீனத்தில் தான் என்றார்.
அதாவது 1 X 2 = 2 என்பதை, ஆங்கிலேயர் சொல்வதனால், one twos are two (மொத்தம் நான்கு வார்த்தைகள்) என்று சொல்ல மனதில் சொல்ல வேண்டி இருக்கும். அல்லது வேறு மாதிரி சொன்னால் கூட formula வில் உள்ள எண்களைக்காட்டிலும் ஒரு வார்த்தையையாவது அதிகமாக சேர்க்கவேண்டும். அதனால் ஒரு எண்ணைப்பெருக்க ஆங்கிலேயர் அதிக நேரம் எடுக்கவேண்டி வருமே என்றார்.
ஆனால் சீனத்தில் என்களை மட்டும்தான் குறிப்பிடுவோம் என்றார்.
அதாவது…yi er er [ yi => ஒன்று, er => இரண்டு] மூன்றே வார்த்தைகளைத்தான் மனதில் சொல்லிப்பார்ப்போம்.

அதனால் எங்களால்(சீனக் கல்வி கற்றவர்களால்) ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் பாடம் கற்றவர்களை விட வேகமாக மனதில் கணக்குப் போடமுடியும் என்று பெருமையடித்தார்.

நான் தமிழிலும் அப்படிதாங்க என்றேன். {ஒரெண்டு ரெண்டு, ஈரெண்டு நான்கு என்று மனப்பாடமாக…சிறு வயதில் 16ஆம் வாய்ப்பாடு வரை மணப்பாடம் செய்ய நான் பட்ட கஸ்டம் இன்னும் நினைவிலிருக்கிறது. இப்போதும் மனதில் கணக்கு போட வாய்ப்பாடு உதவுகிறது என்று தான் சொல்வேன் } . அவருக்கு ஆச்சரியம். மலேசிய மக்கட்தொகையில் 8% தமிழர்களாக இருந்தும் தமிழ் மொழியைப்பற்றி மற்ற இனத்திற்கு அவ்வளவாகத் தெரியாமல் (நம்மவர்கள் தெரியவைக்காமல்) இருப்பது சற்று வருத்தம்தான்.

அவரோட கருத்துப்படி பார்த்தால் , குறைந்தபட்சம் ஆரம்ப வகுப்பு வரை் தமிழ் வழிக்கல்வி கற்ற தமிழன் கணக்கில் புலியாகத்தானே இருக்கவேண்டும்?

தமிழ்வழிக் கல்வியினால் உள்ள நன்மைகள் ஏராளமாக இருக்கறதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதில் இந்த தமிழ் வாய்ப்பாட்டின் பயனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

விடுமுறைக்குப் பின்…

Posted by mugunth on 17 Nov 2004 | Tagged as: வாழ்க்கை

ஐந்து நாள் விடுமுறையில் ஆசிய கண்டத்தை முதல் முறையாகக் கடந்துவிட்டு வந்திருந்தேன்.
ஆஸ்திரிலியாவின் தென் கோடியில் இருக்கும் மெல்போர்ன் நகருக்கு சென்று நேற்றுதான் திரும்பினேன்.�

நவீன கட்டடங்கள், கண்ணுக்கு எட்டியதூரம் வரை தென்படும் புல்வெளிகளில் மேய்துகொண்டிருக்கும் கால்நடைகள், கங்காருக்கள், தூங்குவதையே வாழ்க்கையாகக் கொண்ட அழகான குவாலாக்கள், பிலிப் தீவில் பார்த்த குட்டிப்பென்குவின்கள் என்று பல வகையில் ஆஸ்திரேலிய நாடு என்னை அதிசயிக்க வைத்தது.

இன்று…மீண்டும் சலிப்புத்தட்டும் செக்குமாட்டு கணினி வேலையில்் …
மனிதனின் முழு ஆற்றல் வெளிவர மாற்றம் தேவை என்பதை இப்போது நான் கண்டிப்பாக ஆமோதிப்பேன்

உலகின் தென்பாதியில் இருக்கும் அந்த அதிசய நாட்டில் பார்த்த நினைவுகள் மட்டும் இன்னும் துளிகூட நீங்கவில்லை.�
கிட்டதட்ட 100 டிஜிட்டல் படங்களாக அவற்றை பிடித்து வந்து இன்று என் அலுவலக நண்பர்களிடம் காட்டி நிணைவுகளை பகிர்ந்து கொண்டபோது மீண்டும் மெல்போர்ன் சென்று வந்தேன் என்று கூட சொல்லலாம்.

மற்றபடி இன்றுதான் 5 நாட்களுக்குப் பிறகு இந்திய செய்திகளை படிக்க நேரமும் கிடைத்தது. காஞ்சி மட தலைவர் கைதுபற்றி விரிவாகப் படித்தேன். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தைரியமாக நிரூபித்துக் காட்டிய தமிழக அரசுக்கு என் நன்றிகள்!

கைகொடுத்த லினக்ஸ் !

Posted by mugunth on 04 Nov 2004 | Tagged as: கணிணி

நேற்று அலுவலக்த்தில் என் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் கணினி திடீரென்று படுத்துவிட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை கணினி திறக்க(boot ஆக) மறுத்தது. வேலை அதிகம் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சோதனையை எதிர்பார்க்கவில்லை.

இதனை சரி செய்ய நினைத்து, இயங்குதளத்தின் குறுந்தட்டை எடுத்துவந்து அதிலுள்ள repair் modeஇல் இயக்கிப்பார்த்தேன். ஒன்றும் சரிபடவில்லை.

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை, வட்டிலுள்ள சொந்தக் கோப்புகளை அழிக்காமல், மீண்டும் ஒருமுறை நிறுவிப்பார்த்துவிடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் வட்டிலுள்ள கோப்புகளை அழித்துவிட்டுத்தான் மறுமுறை நிறுவ விடுவேன் என்று எக்ஸ்பி இயங்குதளம் அடம் பிடித்தது.

அலுவலகவேலையின் முக்கியக் கோப்புகளனைத்தையும் காப்பாற்றியாகவேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன்.

வன்தட்டை கழற்றி எடுத்து இன்னொரு கணினியுடன் பொருத்தி கோப்புகளை வெளியே எடுப்பது என்று சுலபமான காரியமில்லை.

என்ன செய்வது என்று யோசிக்கையில் லினக்ஸ் இயங்குதளத்தில் விண்டோஸின் வட்டுக்களை(NTFS வகையில் இருக்கும் வட்டுகளையும்) பார்வையிட முடியும் என்பது நினைவில் வந்தது.

தற்போது என்னிடம் லினக்ஸ் குறுந்தட்டுக்கள் எதுவும் அலுவலகத்தில் வைத்திருக்கவில்லை.
உடனே பக்கத்திலுள்ள தெரிந்த கணினி வன்பொருள் கடையில் ஒரு நாபிக்ஸ் லினக்ஸ் குறுந்தட்டை வாங்கிகொண்டு வந்தேன். இந்த நாபிக்ஸ் லினக்ஸை வன்தட்டில் நிறுவாமலே நம் கணினியின் குறுதட்டிலிருந்தே இயக்கலாம்.
அதாவது குறுந்தட்டை கணினியில் பொருத்தி மீளத்தொடங்கினால் உங்கள் கணினி லினக்ஸில் இயங்குவதைப் பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட மாதிரி என் “விண்டோஸால் கைவிடப்பட்ட” கணினியை, நாபிக்ஸ் லினக்ஸ் மூலமாக உயிர்த்தெழ செய்தேன். கணினி லினக்ஸ் மூலமாக இயங்க ஆரம்பித்தவுடன் அதனை எங்கள் அலுவலக LAN வலைக்குள் கொண்டுவந்தேன். ( IP எண்னை சரியாக மாற்றி அமைத்தானே போதும்.)
பிறகு நாபிக்ஸ் லினக்ஸில் உள்ள சம்பா வழங்கியை (samba server) முடுக்கிவிட்டேன். சம்பா வழங்கி என்பது லினக்ஸ் கணினியின் கோப்புகளை, அதே LAN வலைக்குள் உள்ள மற்ற விண்டோஸ் கணினிகள் பார்க்க வழிவகுக்கும்.

உடனே பக்கத்துக் (விண்டோஸ்) கணினிக்கு என்று என் லினக்ஸ் கணினியின் ip எண் கொண்டு திறக்கையில் , பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பெற்றுக்கொண்டு, லின்க்ஸ் கணினியில் உள்ள அனைத்து வட்டுக்களையும் மற்றும் கோப்புகளையும் **பழுதடைந்த விண்டாஸ் பயன்படுத்திய NTFS ்வவ வட்டு உட்பட** திறக்க முடிந்தது.
உடனே அனைத்துக்கோப்புகளையும் பாதுகாப்பாக இன்னோரு கணினியில் பிரதி எடுத்து கொள்ள முடிந்தது. பிறகு விண்டோஸ் இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவிக்கொண்டேன்.

விண்டோஸ் காலை வாரினாலும் தக்க சமயத்தில் லின்க்ஸ் கைகொடுத்தது. வாழ்க லினக்ஸ்!

அலுவலகத்தில் விண்டோஸ் பயன்படுத்தும் நண்பர்களே உங்கள் கையில் எதற்கும் ஒரு நாப்பிக்ஸ் போன்ற ஒரு லினக்ஸ் குறுந்தட்டு இருக்கட்டும்! ஒரு நாள் அதன் தேவை, விண்டோஸ் புண்ணியத்தில் உங்களுக்கும் வரலாம் ;)
்பிஇ