June 2004
Monthly Archive
Monthly Archive
Posted by mugunth on 30 Jun 2004 | Tagged as: பொது
இன்று அட்டகாசமான ஒரு செய்தியை நண்பர் சுரதா அகத்தியர் குழுவுக்கு எழுதிய மடலில் இருந்து தெரிந்துகொண்டேன். பிபிசி செய்திகளை இனி தமிழ் எழுத்துக்களில் படிக்கமுடியும். அதன் வலைத்தளம்: http://www.bbc.co.uk/tamil/
இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழர்க்கு மிகவும் பயனுள்ள முயற்சி. மேலும் இது யுனிகோடில் வந்துள்ளது. தற்போது தமிழ் என்றாலே அது யுனிகோட் தமிழ்தான் என்ற நிலை மெல்ல வந்துகொண்டிருக்கிறது. இது நல்ல விசயம். புதிய புதிய என்கோடிங் படைக்கும் முயற்சியில் இருந்துகொண்டு, தமிழில் என்கோடிங் குழப்பத்தை எப்போதும் ஏற்படுத்த நினைக்கும் அல்பர்கள் கொட்டம் பலிக்காது என்றுதான் தோன்றுகிறது.
இதில் தேடிப் பார்த்தேன் எங்கேயும் RSS செய்தி ஓடை வசதியைக் காணோம். அது இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தற்போது தமிழ் செய்த்தாள் வலைத்தள்கள் எதிலும் rss ஓடை வசதி இல்லாததது பெரும் குறையே. அதுவும் விரைவில் தீரும் என்று நம்பலாம்.
தமிழ் எழுத்தில் செய்தி வழங்க ஆரம்பித்து இருக்கும் பிபிசிக்கு பெரிய ஓஓஓ……. போட வேண்டும்.
Posted by mugunth on 29 Jun 2004 | Tagged as: பொது
இன்று குசும்பன் என்பவரின் வலைப்பதிவைக் காண நேர்ந்தது. அதில் ‘அடல்ட் குசும்பு (வயதுக்கு வந்தவர்க்கும், வருபவர்க்கும்)’ என்ற தலைப்பிலுள்ளப் பதிவில் நாமக்கலில் தான் எய்ட்ஸ் அதிகம் இருப்பது போல் எழுதியிருந்தார். இந்தக் கருத்தை உண்மை என்று பலபேர் நம்பலாம். ஆனால் நான் இதை நம்பமாட்டேன்.�
நான் நாமக்கல் மாவட்டத்துக்காரன் தான், நிறைய எய்ட்ஸ் ஆட்களைப்பார்த்தவன்தான்.� இருப்பினும் நாமக்கலில் எயிட்ஸ் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன்.
உள்ளதைச் சொல்லவேண்டுமானால், நாமக்கல் ஆட்கள்தான் இந்த நோய் பற்றி அதிக விழிப்புடனும் , அறிவுடனும் , பாதுகாப்புடனும் இருக்கிறார்கள்.
மேலும் நாமக்கலில் உள்ள கிட்டதட்ட அனைத்து முக்கிய மருத்துவமணைகளிலும் எய்ட்ஸ் பரிசோதனை வசதி இருப்பதாக அங்குள்ள என் நண்பர்கள் சொல்கிறார்கள்.
களைப் வெட்டும் இடத்திலும் கூட எய்ட்ஸ் நோயைப்பற்றி விவாதிக்கும் கிராமத்து பெண்களை நாமக்கல் வட்டாரத்தில் மட்டும் தான் பார்க்கமுடியும்… (இதை நானே நேரில் பார்த்துள்ளேன்.)
என்னைப்பொருத்தவரை, நாமக்கல்லைத் விடுங்கப்பா , அங்க இருக்கிற பெரும்பான்மையான மக்களுக்கு எய்ட்ஸில் இருந்து காத்துக்கொள்ள இப்ப(வாது) தெரியும்.�
எய்ட்ஸ் நோய்ப் பற்றி அவ்வளவாகத் தெரியாத மற்ற ஊர்களில் எய்ட்ஸ் என்ற உயிர் கொல்லி நோய அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும வாய்ப்பு உள்ளது். அங்குதான் உடணடியாக எய்ட்ஸ் அபாய மணித் தேவைப்படுகிறது…
Posted by mugunth on 13 Jun 2004 | Tagged as: பொது
இன்று பத்ரியின் வலைப்பதிவைப்பார்க்க நேரிட்டது. அதில் அவர் தினமலர் பத்திரிக்கையின் அயோக்கியத்தனத்தினை படம் பிடித்து காட்டியுள்ளார். இதுபோல் சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அம்பலப்படுத்தவேண்டும்.
தமிழ் வலைப்பதிவுகள் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறிவருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வலைப்பதிவுகள் சமூக பிரச்சனைகளை கையிலெடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ் வலைப்பதிவாளர்கள் திரு பத்ரி எழுதியதைப்போல் சமூகப்பிரச்சனைகளை பற்றி நிறைய எழுதவேண்டும். அதன் மூலம் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்த முடியும். அது சிறப்பான மக்களாட்சிக்கு வழிவகுக்கும்.
Posted by mugunth on 04 Jun 2004 | Tagged as: பொது
[சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து திரு குமார் குமரப்பன் அனுப்பிய செய்திக்குறிப்பு உங்கள் பார்வைக்கும்….]
‘தமிழா! தொண்டர் குழுவின் அயராத உழைப்பினாலும் மலேசியத் தமிழ் நண்பர்களின் விடாத முயற்சியினாலும் வெளியான “தமிழா! 1.0″ மென்பொருட்கள் நிறைந்த குறுந்தட்டு சான் பிரான்ஸிஸ்கோவில் வெளியிடப் பட்டது.
இந் நிகழ்சி கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் மே 22ம் தேதி ஆண்டு விழாவில் நடந்தேறியது. இக் குறுந்தட்டை சான் பிரான்ஸிஸ்கோ Consul General உயர் திரு H. H. S.விஸ்வனாதன் அவர்கள் வெளியிட கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் தலைவி திருமதி. வெற்றிச்செல்வி இராஜமாணிக்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதற்கான நிழற் படத்தை இவ்வலைத் தளத்தில் காண்க.

இக் குறுந்தட்டு வெளியீட்டின் பின், சிலருக்கு இக் குறுந் தட்டு இலவசமாகக் கொடுக்கப் பட்டாலும், அநேக தமிழ்க் கணினி ஆர்வலர்களும் அவர் தம் குழந்தைகளும் இக்குறுந்தட்டை விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்கள். இத் தமிழ் மென்பொருட்களின் முன்னேற்றத்தைக் கண்டு சிலருக்கு ஆச்சரியமே. பலருக்கு இது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது என்பது அங்கிருந்தவர்களுக்குக் கண்கூடு.
குமார் குமரப்பன், சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி, கலிபோர்னியா, அமெரிக்கா
Posted by mugunth on 01 Jun 2004 | Tagged as: பொது
கோலாலம்பூரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ளது போர்ட் டிக்சன் என்னும் ஊர். இது ஒருசுற்றுலாத்தலமும் கூட. [ இதன் வரைப்படத்தினை பார்க்க இங்கே தட்டவும்.]
இங்கு தமிழா! திறவூற்று மென்பொருட்களை அறிமுகம் செய்து உரையாற்றும் வாய்ப்பு இன்று (1ஜூன் 2004) கிடைத்தது.
இங்கு தற்பொழுது இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி பட்டறை நடந்துகொண்டுள்ளது. இங்கு புதிய தொழில்நுட்பங்கள் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் அதில் எங்களுக்கு தமிழா குறுந்தட்டு மற்றும் அதிலுள்ள தமிழ் திறவூற்றுச் செயலிகள் பற்றி பேச ஒரு மணிநேரம் கொடுத்திருந்தனர்.
இதற்கு ஏற்பாடுகளை எல்லாம் செய்தவர் நண்பர் தினேஷ்தான். இங்கே நண்பர் திணேஷ் பற்றி கொஞ்சம் குறிப்பிட விரும்புகிறேன். இவர் இங்கே மலேசியாவில் கணினி பயிற்சிப்பள்ளி ஒன்றை கோலாலம்பூரில் நடத்திவருகிறார். தமிழாவைப்பற்றித் தெரிந்தவுடன் தமிழாவைப்பரப்பும் தீவிரத் தொண்டராக மாறிவிட்டார்
.
இவர் பயிற்சிப் பள்ளியிலும் தமிழா மென்பொருட்களைப் பற்றிய பயிற்சிகளை அளித்துகொண்டுள்ளார். அவர் விசிட்டங்கார்டிலேயே தமிழா மென்பொருட்கள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதைக் குறிப்பிட்டுள்ளாருங்க!
இன்று மாலை எங்கள் அலுவலகத்திற்கு வந்த திணேஷுடன் போர்ட் டிக்ஸன் (Port Dickson )கிளம்பினோம்.
கிட்டதட்ட 8:00 மணிக்கு எங்கள் அறிமுகத்தைத் தொடங்கினோம். நான் 10 நிமிடம், திறவூற்று செயலிகள் பற்றியும், தமிழா குழுப்பற்றியும், தமிழா குறந்தட்டிலுள்ள செயலிகள் பற்றியும் அறிமுக உரையாற்றினேன்.
அதன் பிறகு powerpoint கோப்பு உதவியுடன் தமிழா குறந்தட்டிலுள்ள மென்பொருட்களை பற்றிய விளக்கத்தையும் திணேஷ் கொடுத்தார். [ அந்த கோப்பை நீங்கள் இங்கு தட்டி இறக்கிக்கொள்ளலாம் ]
பிறகு தமிழா குறுந்தட்டிலுள்ள மென்பொருட்களைக் கொண்டு என்ன என்ன செய்யமுடியும் என்பதை செயல்விளக்கமாக காட்டினோம்.
வழக்கம்போல் டக்ஸ் பெயின்ட் தான் வந்தவர்களை மிகவும் கவர்ந்த மென்பொருளாக இருந்தது!
பிறகு இருவரும்கேள்வி பதில்களை சந்தித்தோம்.
இங்கு மலேசியாவில் திறவூற்று மென்பொருட்கள் மொழிபெயர்ப்பு முகாம் ஒன்றை நடத்தும் எண்ணத்தை வெளியிட்டேன். வந்திருந்தவர்களில் பலர் அதில் கலந்து கொண்டு உதவ முன்வந்தார்கள்.
அதே போல் தமிழ் கணினி பயிற்சியை அவரவர் பகுதியில் நடத்தவும் விண்ணப்பங்கள் வந்தன. அனேகமாக அடுத்த மாதம் அனைத்து வாரஇறுதி நாட்களிலும் தமிழ்த்திறவூற்று பயிற்சிகொடுப்பதில் செலவிடுவோம் என்று நினைக்கறேன். கரும்புத்திண்ண கூலியும் கிடைக்கிறது விடுவோமா!
பிறகு தமிழா குறுந்தட்டுக்களை தேவைப்பட்டோருக்கு [ஒரு குறுந்தட்டு 15 ரிங்கட் விலையில்] வழங்கிவிட்டு,
கோலாலம்பூரை நோக்கி வண்டியை கிளப்பினோம்.