பொது
Archived Posts from this Category
Archived Posts from this Category
Posted by mugunth on 09 Apr 2005 | Tagged as: பொது
இன்று www.world66.com என்ற வலைத்தளத்தை மேய வாய்ப்புக்கிடைத்தது. சுற்றுலா செல்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகப்பயனுள்ளத்தளம்.
இதில் பதிவு செய்து நம் பயனக்கட்டுரைகளைப் படைக்கலாம். அதே போல்
மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை படிக்கவும் , திருத்தவும் முடியும். இதைவிட
இதில் இன்னோரு சிறப்பு என்னவென்றால் நாம் இதுவரை சென்று வந்துள்ள
நாடுகளைக் குறிக்கும் வண்ணம் ஒரு உலகப்படத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.
நானும் ஒரு வரைப்படத்தை உருவாக்கி என்னுடைய ரைஸ்(ryze.com)தளத்தில் இட்டுள்ளேன். பார்க்க: http://www.ryze.com/go/mugunth
இதோ நான் சென்றுவந்துள்ள நாடுகளைக்காட்டும் வரைபடம்…
Posted by mugunth on 04 Apr 2005 | Tagged as: பொது
பிபிசி வலைத்தளத்தில் ஒரு செய்தி என் கவனத்தைக்கவர்ந்தது. பார்க்க http://news.bbc.co.uk/2/hi/americas/4409857.stm
கடந்த 2004 வருடத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் 4000 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதாவது பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் சட்டப்பூர்வமாக 4000 மனித உயிர்களை கொலைசெய்துள்ளது. நாகரிமடைந்த காலகட்டத்தில் மரணதண்டனைகள் தேவைதானா?
Posted by mugunth on 09 Feb 2005 | Tagged as: பொது
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வரை (வழியில் இரண்டு இடங்களில் வண்டியை நிறுத்தி டீ அடித்துக்கொண்டும்) பரிநிரல் குறித்தும், அதன் வருங்காலம் மற்றும் தமிழகத்தில் பரிநிரல் மூலம் எத்தகைய சமூதாய மாற்றம் கொண்டுவர முடியும் என்பது குறித்தும் திரு ஆனந்தபாபு மற்றும் திரு அன்பு ஆகியோருடன் விவாதித்தது மறக்கமுடியாத அனுபவம்.
இன்றைய தேதியில் சக்திவாய்ந்த அதிவேக கணினியை(super computer) உருவாக்கவேண்டும் என்றால் அதை பரிநிரல் தொழில் நுட்பத்தைக் (free software technology) கொண்டு தான் சாதிக்க முடியும் என்று திரு அனந்தபாபு குறிப்பிட்டார்.
நாங்கள் வி.ஐ.டி ( வேலூர் தொழில் நுட்பக்கல்லூரி) சென்றடைந்தபோது சுமார் மணி 1:00 ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் மாணவர்கள் மும்முரமாக ‘ஸ்வதந்திரா’ விழாவிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
[ ‘ஸ்வதந்திரா’ விழாவிற்கான ஏற்பாடுகளில் VIT மாணவர்கள்…]ஆர்.எம்.எஸ் வரும் கார் இன்னும் வந்து சேர்திருக்கவில்லை. அவர் இணையத்தைப் பயன்படுத்த விரும்பியதால் வழியில் ஒரு இணைய மையத்திற்கு சென்றுவிட்டு சற்றுத் தாமதமாக வருவதாக கைத்தொலைப்பேசி வழியாக தெரிவிக்கப்பட்டது. சரி அவர் வரும்வரையில் காத்திருக்கலாம் என்று நாங்கள் மாணவர்களுடன் அரட்டையில் இருந்தோம். திரு ஆனந்தபாபுவை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு பரிநிரல் சித்தாந்தம் சம்பந்தமான கேள்விகளைக்கேட்டுகொண்டிருந்தார்கள்.
[ஆனந்தபாவுடன் மாணவர்கள்…]நானும் சென்னை முத்துவும் இன்னொரு பக்கம் கதைத்துக்கொண்டிருந்தோம்.
இரவு முழுதும் கண்விழித்தது நிகழ்ச்சிக்கான வேலைகளை செய்துகொண்டிருக்கும் மாணவர்களை பார்த்தபோது எனக்கு என் எம்.ஐ.டி கல்லூரி நாட்களின் நினைவு வந்தது.
சரியாக நள்ளிரவு 1:15 மணிக்கு ஆர்.எம்.எஸ் அவர்களின் கார் வந்து சேர்ந்தது. அவரை தரிசிக்கும் ஆர்வத்தில் அவரின் காரை சூழ்ந்துகொண்டனர். பிறகு ஆர்.எம்.எஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டது.
பிறகு நாங்கள் தங்கும் அறைகளுக்கு வி.ஐ.டி மாணரவர் இருவர் அழைத்துச்சென்றனர்.
[ஆர்.எம்.எஸ் காரை சுற்றி ஆர்வத்தில் மாணவர்கள்…]
மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணி அளவில் திரு ஆர்.எம்.எஸ் அவர்களின் உரை ஆரம்பமாது. மணி 12:30 வரை பரிநிரல் சித்தாந்தம் பற்றியும், ஏன் பரிநிரல் அறவாரியத்தை(Free Software foundation) ஆரம்பித்தார்கள் என்பது பற்றியும் விரிவான உரையை நிகழ்த்தினார்.
பிறகு கேள்வி நேரம். கேள்விகளை தாளில் எழுதிக் கொடுத்துவிடுங்கள் என்று அறிவித்தவுடன், மடமடவென்று கல்லூரி மாணவர்களிடமிருந்து கேள்விகள் வந்து குவிய ஆரம்பித்தது.
[உரைக்குப் பின் கேள்விகளை எதிர்நோக்கியவாறு…]அதன் பிறகு மதிய உணவு , பிறகு ஆனந்தபாபுவின் உரை மற்றும் திரு நாகார்ஜூன் அவர்களின் உரையும் இருந்தது.
அந்த உரைகளுக்கிடையே திரு அன்பு அவர்களுடன் அருகிலிருந்த கேண்டீனில் அமர்ந்து தமிழ் பரிநிரல்களை பரவலாக்குவது பற்றியும் அதற்காக வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் சற்று நேரம் பேசமுடிந்தது. தமிழகப் பரிநிரல் அறவாரியம் அமைப்பின் கீழ் அனைத்து தமிழ் பரிநிரல் செயல்பாடுகளையும் கொண்டு வரவேண்டுமென்றும் முடிவு செய்தோம்.
[ஆனந்த பாபு உரை]பிறகு 8:00 மணியளவில் மாணவர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும இரவு விருந்து அளிக்கப்பட்டது.
[இரவு விருந்தில் நான், ஆனந்தபாபு மற்றும் திரு ஆர்.எம்.எஸ்]
[மாணவர்களுடன் போஸ்கொடுக்கும் ஆர்.எம்.எஸ் ]
[தன் இசைத்திறமையையும் வெளிப்படுத்தும் ஆர்.எம்.எஸ் ]பிறகு சுமார் இரவு சுமார் 9:00� மணி அளவில் ஆர்.எம்.எஸ் மற்றும் நாங்கள் 7 பேர் ஒரே வேனில் சென்னை நோக்கி புறப்பட்டோம். ஆர்.எம்.எஸ் க்கு திங்கட்கிழமை எம்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டியில் நிகழ்ச்சி இருந்தது. நான் வழியிலேயே கிண்டியில் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு இறங்கிகொண்டு இரவு 12:00 மணிவாக்கில் வீடு வந்து சேர்ந்தேன்.
வேலூர் தொழில் நுட்பக் கல்லூரியின் ‘ஸ்வதந்திரா’� நிகழ்ச்சியும் , ஆர்.எம்.எஸ் அவர்களின் சந்திப்பும் பரிநிரல் சித்தாந்தத்தின் மீதுள்ள என் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது
Posted by mugunth on 28 Oct 2004 | Tagged as: பொது
இன்று ஒரு வழியாக என் பழைய வழைப்பதிவினை மீட்டு என் புதிய சேவையகத்தில் இயங்கும்படி செய்துவிட்டேன். இனி தமிழா.காம், தமிழ்புளோக்ஸ்.காம் மற்றும் தமிழா டெவலப்பர் தளங்களை செயல்படும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். நேரம் கிடைப்பதுதான் தற்போது குதிரைக்கொம்பாகிவிட்டது.
தமிழா! திட்டத்தையும், வலைத்தளத்தினை சிறப்பாக கூட்டுமுயற்சியாக இன்னும் சிறப்பாக செயல்படுத்தவேண்டும், அதன் மூலம் அனைத்துத் தமிழருக்கும் கணினித்தொழில்நுட்பத்தின் பலன்கள் எளிதாகக் கிட்டவேண்டும்.� அதன் மூலம் உலகளவில் பெரும் பொருளார சக்தியாகத் தமிழினம் வளரவேண்டும் என்பதே என் கனவு… இறையாற்றல் துணையுடன் கனவு மெய்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை…
Posted by mugunth on 03 Sep 2004 | Tagged as: பொது
அன்மையில் ஈராக்கில் நேப்பாள் நாட்டு தொழிலாளர்களை தீவிரவாதிகள் கொன்ற சன் தொலைக்காட்சியில் அப்பட்டமாக பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு கிடைத்தது. மனிதனை ஆடு அறுப்பதுபோல் அறுக்கிறார்கள் அதை அப்படியே ஒரு பொதுசன தொலைக்காட்சியில் காட்டித்தொலைக்கிறார்கள். எனக்கே சகிக்கவில்லை. நல்லவேளை அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் குழந்தைகள் யாரும் அப்போது இல்லை.
இதுபற்றி இணையத்து நண்பர் நாமக்கல் ராஜாவிடன் மறுநாள் குறிப்பிட்டதற்கு அவர் சொன்னார். நாங்க தொலைக்காட்சியில இது போல் பல கொலைகளை பார்த்துட்டோங்க என்று சாதாரணமாக பதிலளித்தார்.
இப்படிப்பட்ட கொடுரமான காட்சிகளை ஏன் இப்படி அயோக்கியத்தனமாக இந்தத் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன? இப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து காட்டினால் தமிழன் மனதில் வன்முறை வளராமல் வேறு என்ன வளரும். ஊடகங்களின் இத்தகைய பொருப்பற்ற தன்மையை கண்டிக்க வழியில்லையா?
Posted by mugunth on 25 Aug 2004 | Tagged as: பொது
இன்றைய ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. இந்தியாவிலும் குறைந்தவிலை விமான சேவை ஆரம்பித்துவிட்டது!
பார்க்க: http://in.rediff.com/money/2004/aug/25deccan.htm
வரவேற்கப்படவேண்டிய வரலாற்று நிகழ்ச்சி. இனி விமானத்தில் யாரும் பயனம் செய்யும் நிலை வந்துவிட்டது!!!
இனி மேல் விமானங்களின் காலமாகத்தான் இருக்கப்போகிறது. இதுபோல் குறைந்தவிலை விமானங்கள் பல வரவேண்டும்.
அதே போல் ஒரு தமிழனும் இதுபோல் ஒரு விமான சேவையினைத்துவக்கி… தமிழில் விமானத்தின் பெயரை எழுதி, தமிழில் அறிவிப்புகளை கொடுத்து… தமிழின்-தமிழனின் புகழைப் பரப்பும் நாள் எந்த நாளோ…………
இன்றையக் கனவுகள் தானே நாளைய நிஜங்கள்… வானமும் தமிழனின் வசப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை!
Posted by mugunth on 12 Aug 2004 | Tagged as: பொது
திட்டமிட்டு நாள்/நேரம் குறித்து ஒரு மனித உயிரை(அவன் என்னதான் தவறு செய்திருந்தாலும்) கொலை செய்யும் கொடுமை இன்னம் சில மணி நேரத்தில் புத்தனும் காந்தியும் பிறந்த புனித மண்ணில் நடைபெற உள்ளது.
[பார்க்க: http://www.rediff.com/news/2004/aug/10kolkata.htm
இதையும் பாருங்கள்:� http://in.rediff.com/news/2004/aug/12dhan.htm ]
இக்கொடுமை 100 கோடி மக்களின் சார்பாக உள்ள சட்டத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற உள்ளது. இதை விட கேவலம் மனித குலத்திற்கு வேறெதுமில்லை!
இழவுக்கு வந்திருப்பவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறான் , பிணமாக போகிறவன், என்னக் கொடுமை இது ![]()
நாம் வாழ்வது கணினி யுகமுமில்லை, ஒரு வெங்காய யுகமுமில்லை. காட்டுமிராண்டிகளின் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
[தகவலுக்கு: மரணதண்டனையை ஒழித்துவிட்ட நாடுகளின் ஒரு பட்டியல் கீழே…
வருடம்- நாடு
============
1976 Portugal
1978 Denmark
1979 Luxembourg, Nicaragua, Norway
1981 France, Cape Verde
1982 Netherlands
1985 Australia
1987 Haiti, Liechtenstein, German Democratic Republic
1989 Cambodia, New Zealand, Romania, Slovenia
1990 Andorra, Croatia, Czech & Slovak Federal Republic,Hungary, Ireland, Mozambique, Namibia, São Tomé, Principe
1991 Slovenia, Croatia
1992 Angola, Switzerland
1993 Greece, Guinea-Bissau, Hong Kong
1994 Italy
1995 Mauritius, Moldova, Spain
1996 Belgium
1998 Bulgaria, Lithuania
1999 Bermuda
2000 Poland
2001 Chile
2002 Serbia, Yugoslavia, Cyprus. ]
Posted by mugunth on 07 Jul 2004 | Tagged as: பொது
இன்று அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு சும்மா சுற்றுவதென்று காலையிலேயே முடிவு செய்துவிட்டேன். ஒரு மாற்றத்திற்குத் தான்- மேலும் நிறைய லீவு வேற பயன்படுத்தாமல் பாக்கி இருக்கிறது எனக்கு
.� மேலும் இன்னைக்கு எந்த மீட்டிங்கும் இல்லை மற்ற அலுவலக வேலைகளை நண்பர்கள் கவனித்துக்கொள்ள முடியும் ஆகையால் நான் போகாமல் இருந்தால் ஒன்றும் பாதகமில்லை…
அலுவலக நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து இன்னைக்கு அலுவலகம் வரமாட்டேன் sick leave சொல்லிடு என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்து உறங்கிவிட்டு மணி 11:00க்கு எழுந்தேன். நண்பர் கணேசன்(http://www.ryze.corm/go/PropertyAgent ) மதிய உணவு சாப்பிட ஏற்கணவே கூப்பிட்டு இருந்தார். அவருக்கு தொலைபேசியில் மணி 12.30 க்கு அவர் அலுவலகத்திற்கு வருவதாகத் தெரியப்படுத்திவிட்டு புறப்பட்டு சென்றேன்.
கணேசனின் அலுவலகம் இருக்கும் அதே அலுவலகத்தில் தான் நண்பர் டேவிட் ஆனந்தின் (http://www.ryze.com/go/davidananth ) அலுவலகமும் இருக்கிறது. அவர் தான் அன்மையில் பார்த்த காமராஜ் என்ற படத்தைப்பற்றி ரொம்ப சிறப்பாக சொல்லிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து அந்த சிடியை டேவிட்டிடம் இருந்து பெற்றுக்கொண்டு, மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.
படத்தை என் கணினியில் பார்த்தவுடன் இதன் தயாரித்தவர்களுக்கு ஒரு கோடி நன்றி சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது. மிகவும் தரமாகப் படத்தை எடுத்து காமராஜரையும் உள்ளது உள்ளபடி அருமையாகக் காட்டியுள்ளார்கள்.
காமராஜரை இயக்கிய எண்ணங்களை அழுத்தமாக காட்டியிருக்கிறார்கள்,� குறிப்பாக அவரை இயக்கிய ‘கல்வியை அனைவருக்கும் அளிக்கவேண்டும்’ மற்றும் ‘வறுமையைப்போக்கவேண்டும்’ என்ற தீவிர சிந்தனையை இந்தப் படம் பார்க்கும் எவரும் உணரமுடியும்.
தமிழகத்தைப்பற்றியும் அதன் வரலாற்றைப்பற்றியும் அதிகம் தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாத மலேசியத் தமிழராகிய டேவிட் போன்றோரையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது என்றால், அதுதான் இந்தப்படத்தின் வெற்றி என்று சொல்லலாம். { பெரும்பாலான மலேசிய மற்றும் சிங்கைத்தமிழர்களுக்கு (அதாவது தற்போதைய இளையத் தலைமுறைக்கு) தமிழகத்தின் வரலாறு தெரியாது என்பதை தமிழகத் தமிழர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் }
இப்படத்தில் சிலக்காட்சிகள் மனதில் நிற்கின்றன,
1. சாரயம் விற்றதற்காக போலீஸ் பிடித்துச் சென்ற� தன் கணவரை வெளியேவிட கோரும் பெண்னிடம் கடுமையாக பேசும் காமராஜரும், பிறகு காரில் போகும்போது அந்த பெண்ணின் குரலும், அவள் கையில் இருந்த குழந்தையின் கதறலும் காமராஜரின் நினைவுக்கு வரும்படிக் காட்டப்பட்ட காட்சி அருமையாக காமராஜரின் குணத்தைக் காட்டும்படி இருந்தது.
2. கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதற்காக இந்திராகாந்தி மேல் நடவடிக்கை எடுக்கபோவதாக காமராஜர் அறிவத்ததைப்பற்றி இந்திராகாந்தியிடம் நிருபர்கள் ஒரு காட்சியில் கேட்பார்கள். அதற்கு who is kamaraj? என்பாரே பார்க்கலாம். இது உண்மையில் நடந்ததுதான் என்றாலும் படத்தில் அந்தகாட்சி மிக தத்ருபமாக காட்டப்பட்டிருக்கிறது. தமிழனாகிய காமராஜரை அவர் அலட்சியப்படுத்தியது, தமிழர் அனைவரையும் அலட்சியப்படுத்தியது போல் தான் எனக்கு பட்டது.
இங்கே, இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய வரலாற்றுப்பிழையும் ஒரு தமிழனாக என் மனதைத் தாக்கியது. who is kamaraj? என்று கேட்ட இந்திராவை பிரதமாராக ஆக்கியவரும் அதே காமராஜ்தான். அதற்காக டெல்லியில் இருந்து போராடுவதாகக் காமராஜரைக் காட்டும் போது அவர் image விஸ்வரூபமாக தெரிந்தது. அவரை தமிழரின் பிரதிநிதி என்று பார்த்தால் தமிழனின் image டெல்லியில் அப்போது பிரமாண்டமாகத்தான் (படத்தில் காட்டப்பட்டிருப்பது போல்) இருந்திருக்கம் என்று நிணைக்கிறேன்.
அந்த சமயத்தில் பிரதமர் பதவி காமராஜருக்கு வலிய வந்தது. அதை ஏன் புறந்தள்ளிவிட்டு இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்? அந்த சமயத்தில் காமராஜர் என்ற தமிழர் பிரதமாராக ஆகியிருந்தால் இந்தியத் தமிழனின் தலையெழுத்து கொஞ்சம் வேறுமாதிரியாக ஆகியிருந்திருக்கும் அல்லவா? ஏன் இந்த வரலாற்றுப்பிழை நடந்தது ?
3. இந்தப் படத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அருவருக்கத்தக்க முறையில் காட்டியுள்ளார்கள். இது ரொம்ப அநியாயம். மொழிப் போராட்டத்தை ஏதோ வன்முறைப்போராட்டம் போல் காட்டியிருக்கிறார்கள். இது இந்தப்படத்தின் மோசமான அங்கம்.
மேலும் ஏன் காமராஜரின் புகழ் கடைசிகாலத்தில் மங்க ஆரம்பித்தது என்பதை இந்தப் படம் சரியாகக் காட்டவில்லை.
மற்றபடி இது ஒரு சிறந்த திரைப்படம் என்றதான் சொல்வேன்,.
எல்லாத் தமிழனும் ஒருமுறையாவது,� நம் வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற காமராஜரைப்பற்றி இந்தத் திரைப்படத்தினை கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.
Posted by mugunth on 01 Jul 2004 | Tagged as: பொது
தென்ஆப்ரிக்க ஜுலு இன இளைஞன் தமிழிசையை (ஆம்… தமிழனுக்குச் சொந்தமான , தமிழிசையை, கர்நாடக இசை என்ற தவறான பெயரில் நான் அழைக்க விரும்பவில்லை ) கற்று தேர்ந்துள்ள செய்திக்குறிப்பை இன்று பிபிஸி வலைத்தளத்தில்் கேட்டேன்.
இந்தச் சுட்டியில் இருந்து நீங்கள் கேட்கலாம்: http://www.bbc.co.uk/tamil/040606_music_patrick.ram
தமிழ் இசையை ஆர்வத்துடன், செலவு செய்து சென்னையில் வந்து தங்கி ஜேசுதாஸிடம் கற்று தேர்ந்து தென்ஆப்பரிக்கா திரும்பிய பேட்ரிக்கிற்கு , தென்னாப்பரிக்க வாழ் தமிழரே ஆதரவு தராதது வருத்தமான செய்திதான்.
அன்றாட குடும்பச்செலவுகளுக்கு வாடகைக்கார் வைத்திருப்பதாக சொல்கிறார். தமிழர்களே! ஒரு வேண்டுகோள் , நம் கலைகள் வாழ வேண்டும். அதற்கு கலைகளைக்கற்ற கலைஞர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.
தமிழனின் கலையை ஆர்வத்துடம் கற்க வந்த பேட்ரிக்களின் கவலைப் படும் நிலையில் நாம் விடவேண்டுமா? தென்னாப்பரிக்க வாழ் தமிழர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
Posted by mugunth on 30 Jun 2004 | Tagged as: பொது
இன்று அட்டகாசமான ஒரு செய்தியை நண்பர் சுரதா அகத்தியர் குழுவுக்கு எழுதிய மடலில் இருந்து தெரிந்துகொண்டேன். பிபிசி செய்திகளை இனி தமிழ் எழுத்துக்களில் படிக்கமுடியும். அதன் வலைத்தளம்: http://www.bbc.co.uk/tamil/
இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழர்க்கு மிகவும் பயனுள்ள முயற்சி. மேலும் இது யுனிகோடில் வந்துள்ளது. தற்போது தமிழ் என்றாலே அது யுனிகோட் தமிழ்தான் என்ற நிலை மெல்ல வந்துகொண்டிருக்கிறது. இது நல்ல விசயம். புதிய புதிய என்கோடிங் படைக்கும் முயற்சியில் இருந்துகொண்டு, தமிழில் என்கோடிங் குழப்பத்தை எப்போதும் ஏற்படுத்த நினைக்கும் அல்பர்கள் கொட்டம் பலிக்காது என்றுதான் தோன்றுகிறது.
இதில் தேடிப் பார்த்தேன் எங்கேயும் RSS செய்தி ஓடை வசதியைக் காணோம். அது இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தற்போது தமிழ் செய்த்தாள் வலைத்தள்கள் எதிலும் rss ஓடை வசதி இல்லாததது பெரும் குறையே. அதுவும் விரைவில் தீரும் என்று நம்பலாம்.
தமிழ் எழுத்தில் செய்தி வழங்க ஆரம்பித்து இருக்கும் பிபிசிக்கு பெரிய ஓஓஓ……. போட வேண்டும்.