சிட்டுக்குருவிகளை நம் வீடுகளில் அண்மை காலங்களில் பார்க்க முடியவில்லை என்று அப்பாவி இந்தியன் என்பவர் எழுதிய இந்த பதிவில் படித்தேன். http://kaartz.blogspot.com/2007/07/blog-post_6979.html

யோசித்துப்பார்க்கும்போது எனக்கும் சிட்டுக்குருவிகளை கடைசியாக பார்த்து வெகு நாட்களாகிவிட்டது புரிந்தது. ஒருவேளை இங்கு பெங்களுரில் எப்போதும் சிட்டுக்குருவிகள் இருக்காதா இல்லை இது சுற்றுசூழல் மாற்றத்தின் விளைவா என்று புரியவில்லை.

அடுத்தமுறை சொந்த ஊருக்குச் செல்லும்போது சிட்டுக்குருவியைத் தேடவேண்டும் என்று இருக்கிறேன்.

யாதார்த்தமான ஒரு விசயத்தை பற்றிய சிந்தனையை தூண்டக்கூடிய பதிவை எழுதிய அப்பாவி இந்தியனுக்குப் பாராட்டுக்கள்.