இன்று மதியம் என் அலுவலக நண்பர் சுபாஷ், தன்னுடைய போட்டோ தினகரனில் வந்துள்ளது என்றார். வாழ்த்துக்கள், உங்க போட்டோ பத்திரிக்கைல வர அளவுக்கு என்ன செஞ்சீங்க என்றேன். என்னோட போட்டோ இல்லைங்க, நான் எடுத்த படத்தை என்ன கேட்காமலே தினகரன்ல சுட்டு போட்டிருக்காங்கன்னார்.

இந்த நண்பர் தான் எடுத்த பெங்கலூர் பி.எம்.டி.சி பேருந்து போட்டோவை(அந்த போட்டோவில் அவர் நண்பரும் இருக்கிறார்) ஃபிளிக்கரில் ஏற்றி வைத்திருந்தார். பார்க்க: http://flickr.com/photos/subwiz/294655262/


இதை தினகரன் பத்திரிக்கை ஆட்கள் எடுத்து அவர்கள் பத்திரிக்கையில் ஒரு செய்திக்காக போட்டிருக்கிறார்கள். பார்க்க: http://www.flickr.com/photos/subwiz/580464665/


இதைப்பற்றிய சுபாஷின்ஆங்கிலப் பதிவு: http://jroller.com/page/jcraze?entry=my_photograph_stolen

தினகரன் செய்திருப்பது அப்பட்டமான அறிவுத்திருட்டு.

தினகரன் பத்திரிக்கை செய்தி