தமிழகத் தேர்தல் பிராச்சாரம் முடிவடையும் நிலையில் ஜெயா டிவியில் நேற்று கலைஞரைப்பற்றி ஒரு புது குண்டு போடப்பட்டது.

கலைஞரின் கைமாறு என்று தலைப்பிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அதில் ராஜீவ் காந்தி கொலையாளிகளில் ஒருவராக தண்டனைப்
பெற்றுக்கொண்டிருக்கும் நளினியின் குடும்பத்தாரின் ஒரு திரைப்படத்திற்கு
கலைஞர் கதைவசனம் எழுதியது மட்டுமின்றி அதற்குச் தேவையான நிதிவுதவியையும்
கொடுத்திருக்கலாம் என்று அந்த நிகழ்ச்சி தெரியப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சி எவ்வகையில் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது தேர்தல்
முடிவுகளைப் பாதிக்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.