ஐந்து நாள் விடுமுறையில் ஆசிய கண்டத்தை முதல் முறையாகக் கடந்துவிட்டு வந்திருந்தேன்.
ஆஸ்திரிலியாவின் தென் கோடியில் இருக்கும் மெல்போர்ன் நகருக்கு சென்று நேற்றுதான் திரும்பினேன்.�

நவீன கட்டடங்கள், கண்ணுக்கு எட்டியதூரம் வரை தென்படும் புல்வெளிகளில் மேய்துகொண்டிருக்கும் கால்நடைகள், கங்காருக்கள், தூங்குவதையே வாழ்க்கையாகக் கொண்ட அழகான குவாலாக்கள், பிலிப் தீவில் பார்த்த குட்டிப்பென்குவின்கள் என்று பல வகையில் ஆஸ்திரேலிய நாடு என்னை அதிசயிக்க வைத்தது.

இன்று…மீண்டும் சலிப்புத்தட்டும் செக்குமாட்டு கணினி வேலையில்் …
மனிதனின் முழு ஆற்றல் வெளிவர மாற்றம் தேவை என்பதை இப்போது நான் கண்டிப்பாக ஆமோதிப்பேன்

உலகின் தென்பாதியில் இருக்கும் அந்த அதிசய நாட்டில் பார்த்த நினைவுகள் மட்டும் இன்னும் துளிகூட நீங்கவில்லை.�
கிட்டதட்ட 100 டிஜிட்டல் படங்களாக அவற்றை பிடித்து வந்து இன்று என் அலுவலக நண்பர்களிடம் காட்டி நிணைவுகளை பகிர்ந்து கொண்டபோது மீண்டும் மெல்போர்ன் சென்று வந்தேன் என்று கூட சொல்லலாம்.

மற்றபடி இன்றுதான் 5 நாட்களுக்குப் பிறகு இந்திய செய்திகளை படிக்க நேரமும் கிடைத்தது. காஞ்சி மட தலைவர் கைதுபற்றி விரிவாகப் படித்தேன். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தைரியமாக நிரூபித்துக் காட்டிய தமிழக அரசுக்கு என் நன்றிகள்!